செய்திகள் :

அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை; சமூக நீதி பற்றி பேச என்னைத்தவிர வேறு ஆள் இல்லை: ராமதாஸ்

post image

அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழுவுக்குப் பின்னர், 'பாமகவின் தலைவர் நானே' என ராமதாஸ் கூறினார். பின்னர் கட்சியில் சலசலப்பு ஏற்படவே தானே தலைவராகத் தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டார்.

தொடர்ந்து, தைலாபுரம் தோட்டத்தில் கடந்த மே 15, 16 தேதிகளில் நடைபெற்ற பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை. இதனால் பாமக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி இடையே இடையே சுமூக நிலை உருவாகிவிட்டதாகவும் விரைவில் இருவரும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி கூறியிருந்தார்.

தொடர்ந்து கட்சியின் சமூகநீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தைலாபுரத்தில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ்,

"எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. நான் இனிப்பான செய்திகளைத்தான் சொல்லியிருக்கிறேன். கசப்பான செய்தியைச் சொன்னதில்லை.

வரும் நாள்களில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் அன்புமணி கலந்துகொள்வார். பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கபோவதாக வதந்திகளை கிளப்பிவிடுகின்றனர். அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா?" என்று பேசினார்.

மேலும், 'சமூக நீதியைப் பற்றி பேச வேண்டுமென்றால் இந்திய அளவில் என்னைவிட்டால் வேறு ஆளே கிடையாது. நான் மட்டும்தான் அதைப் பற்றி பேச முடியும். மற்றவர்கள் பேச முடியாது. ஏனெனில் அவர்களுக்குத் தெரியாது' என்றார்.

இதையும் படிக்க | தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

குறுவை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்

புதிய விதிகளால் ஏழை, நடுத்தர மக்கள் நகைக்கடன் பெற முடியாது சூழல் உள்ளதால் நகைக்கடன் வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் - தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வங்கிகள் ம... மேலும் பார்க்க

பெங்களூருவில் கனமழை: 7 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூருவில் 3 நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. திங்கள்... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!

பென்னாகரம்: காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்தது.கடந்த சில நாள்களாக தமிழக - கா்நாடக மாநிலங்களில் காவிரிக் கரையோர வன... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.35 உயா்ந்த... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு

பெதுல்: மத்தியப் பிரதேம் மாநிலம் பெதுல் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்... மேலும் பார்க்க