செய்திகள் :

கொல்கத்தா வானில் பறந்த உளவாளி ட்ரோன்கள்?

post image

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின், ஹேஸ்டிங்க்ஸ், வித்யாசாகர் சேது மற்றும் மைதான் ஆகிய பகுதிகளின் வானில், கடந்த மே 19 ஆம் தேதியன்று இரவு ட்ரோன்களைப் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது வெளிநாடுகளின் உளவாளி ட்ரோன்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் அம்மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு, மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, அம்மாநில பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்கத்தா நகரத்தின் வானில் பறந்த ட்ரோன்களைப் பற்றிய தகவல் கிடைக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அதன் பின்னனியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, ஹேஸ்டிங்க்ஸ் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“ இந்த ட்ரோன் போன்ற அமைப்புகள் சௌத் 24 பார்கனாஸ் மாவட்டத்தின் மஹேஸ்தலா பகுதியிலிருந்து கொல்கத்தா நோக்கி பறந்து வந்துள்ளது. பின்னர், ஹேஸ்டிங்க்ஸ் பகுதியில் பறந்த அவை, ஹூக்லி பாலத்தின் மீதும் வில்லியம் கோட்டை (ராணுவத்தின் கிழக்குப் படையின் தலைமையகம்) மீதும் பறந்துள்ளது. மேலும், அவை பார்க் சர்க்கஸ் பகுதியில் பறந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கிழக்குப் பகுதிகளின் மீது பறந்த அவை பின்னர் மாயமாகியுள்ளன” என அவர் பேசியுள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு அதிரடி படை மற்றும் கொல்கத்தா காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!

ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்: உயிர்த் தப்பிய பயணிகள்!

தில்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால் இன்று (மே 21) சேதமடைந்தது. எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அதிருஷ்டவசமா... மேலும் பார்க்க

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த க... மேலும் பார்க்க

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போ... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ... மேலும் பார்க்க

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க