செய்திகள் :

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

post image

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, 8.45% பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் உள்ளூர் விமானத்தில் பயணித்தோரின் எண்ணிக்கை 575.13 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 523.46 லட்சமாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு உள்ளூர் விமானத்தில் பயணித்தோரின் எண்ணிக்கை 9.87% அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 38.8% பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தனர். மோசமான வானிலையே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நேரடியாக 20,840 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விமான நிறுவனங்கள் 41.69 லட்சம் தொகையை இழப்பீடாகத் திரும்ப வழங்கியுள்ளது.

முன்பதிவு ரத்தைப் போன்றே, விமான தாமதமும் முக்கிய காரணியாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 96,350 பேர் விமான தாமதத்தை சந்தித்துள்ளனர். இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 68% ஆகும். இதில் 70% பயணிகள், முந்தைய பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் வந்து சேர்ந்த நேர தாமதத்தாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தனது பயணிகள் சந்தை மதிப்பை 64.1% அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இது 64% ஆக இருந்தது.

இதேபோன்று ஏர் இந்தியா நிறுவனமும் தனது பயணிகள் சந்தை மதிப்பை 27.2% ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இது 26.7% ஆக இருந்தது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை நீட்டிப்பு

இந்திய விமானங்கள் தங்களின் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாத... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அரசு நிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

‘அரசு நிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது. நீண்டகால பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அரசு நிலமாக இருந்தால் அதை மீட்டெடுப்பதற்கு அரசுக்கு சட்டபூா்வ அதிகாரம் உள்ளது’ என்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமித் ஷாதான் பொறுப்பு- காங்கிரஸ் உறுதி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாதுகாப்பு தோல்வியே முக்கியக் காரணம். இதற்கு உள்துறை அமைச்சா் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரப்... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு: ஒரு நாள் முன்பாக ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா்களுக்கும் வழங்க உத்தரவு

வருடாந்திர ஊதிய உயா்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு பலன்களை அளிக்க அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இந்த நடவட... மேலும் பார்க்க

இந்தியாவுக்கான இலங்கை புதிய தூதராக கொலன்னே விரைவில் பொறுப்பேற்பு

நமது சிறப்பு நிருபா் இலங்கை புதிய தூதராக அண்மையில் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்ட பி.எம். கொலன்னே ஓரிரு தினங்களில் தில்லியில் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக இந்திய... மேலும் பார்க்க

டென்மாா்க் அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு- இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை

டென்மாா்க் நாட்டின் தொழில், வா்த்தகம் மற்றும் நிதித் துறை அமைச்சா் மாா்டின் போட்ஸ்கோவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவத... மேலும் பார்க்க