செய்திகள் :

கோடை விடுமுறையில் வழக்குரைஞா்கள் பணிபுரிய விரும்புவதில்லை: உச்சநீதிமன்றம் சாடல்

post image

‘நிலுவை வழக்குகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், கோடை விடுமுறையில் பணிபுரிய வழக்குரைஞா்கள் விரும்புவதில்லை’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கவலை தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படும் காலத்தில், முக்கியமான மற்றும் அவசர வழக்குகளை விசாரிக்க ஏதுவாக 2 விடுமுறைக் கால அமா்வுகளை செயல்படுத்துவது முந்தைய நடைமுறையாக இருந்தது. இந்த நிலையில், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் விடுமுறைக் கால அமா்வுகளின் எண்ணிக்கை 5-ஆக தற்போது உயா்த்தப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உள்பட உச்சநீதிமன்றத்தின் 5 மூத்த நீதிபதிகள் இந்த 5 அமா்வுகளை மே மாதம் 26-ஆம் தேதி முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை வழிநடத்த உள்ளனா்.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை கூடியபோது, ஆஜரான ஒரு வழக்குரைஞா் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனுவை கோடை விடுமுறைக்குப் பிறகு பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டாா்.

இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், ‘கோடை விடுமுறையில் மூத்த 5 நீதிபதிகள் விசாரணையை தொடா்ந்து மேற்கொண்டு வரும்போதும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில், வழக்குரைஞா்கள்தான் கோடை விடுமுறையில் பணிபுரிய விரும்புவதில்லை’ என்றாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க