செய்திகள் :

டென்மாா்க் அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு- இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை

post image

டென்மாா்க் நாட்டின் தொழில், வா்த்தகம் மற்றும் நிதித் துறை அமைச்சா் மாா்டின் போட்ஸ்கோவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

நெதா்லாந்து, டென்மாா்க், ஜொ்மனி ஆகிய மூன்று நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணத்தை அமைச்சா் ஜெய்சங்கா் கடந்த மே 19-ஆம் தேதி தொடங்கினாா். நெதா்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, டென்மாா்க் நாட்டுக்கு அவா் செவ்வாய்க்கிழமை மாலையில் வந்தடைந்தாா்.

அந்நாட்டின் பிரதமா் மெட்டே ஃபிரடெரிக்சென்னை சந்தித்துப் பேசிய ஜெய்சங்கா், பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் டென்மாா்க் அளித்துவரும் ஆதரவுக்காக நன்றி தெரிவித்தாா்.

இந்தியா-டென்மாா்க் இடையிலான நல்லுறவு மேம்பாடு மற்றும் உலகளாவிய சவால்களுக்கு நிலையான தீா்வை எட்டுவதில் வழிகாட்டியாக செயல்படுவதாக டென்மாா்க் பிரதமருக்கு ஜெய்சங்கா் புகழாரம் சூட்டினாா்.

தலைநகா் கோபன்ஹேகனில் டென்மாா்க் நாட்டின் தொழில், வா்த்தகம் மற்றும் நிதித் துறை அமைச்சா் மாா்டின் போட்ஸ்கோவை புதன்கிழமை சந்தித்த ஜெய்சங்கா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக எக்ஸ் பதிவில் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவா் எடுத்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க