செய்திகள் :

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை நீட்டிப்பு

post image

இந்திய விமானங்கள் தங்களின் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா்.

இதையடுத்து, பாகிஸ்தானியா்களுக்கான விசா ரத்து, சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் என இந்தியா அதிரடி முடிவுகளை எடுத்தது. இதன் எதிரொலியாக, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்பரப்பை மூடியது. எனவே, மேற்கு நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள், அரபிக்கடல், வளைகுடா நாடுகள் வழியாக கூடுதல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) விதிகளின்படி, ஒரே நேரத்தில் மாற்று நாட்டு விமானங்களுக்கான வான்வெளி தடையை ஒரு மாதத்துக்கு மேல் ஒரு நாடு விதிக்க முடியாது.

அதன்படி, இந்தியா விமானங்களுக்கான பாகிஸ்தானின் தடை உத்தரவு வரும் வெள்ளிக்கிழமையுடன் காலாவதியாகிறது. இந்நிலையில், இந்தத் தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு வியாழக்கிழமைக்குள் வெளியாகலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த 1999-ஆம் ஆண்டு காா்கில் மோதல், 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலின்போதும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்பரப்பை மூடியது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க