செய்திகள் :

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

post image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்த மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்துவந்த நிலையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (மே 22, 23) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 101.45 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், தூத்துக்குடி - 100.76, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை - தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 22, 23-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மிதமான மழை: ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை (மே 22) முதல் மே 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னைக்கு மழை: சென்னையில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக விம்கோ நகா் மற்றும் மணலியில் தலா 60 மி.மீ. மழை பதிவானது. அதேபோல், புழல், எண்ணூா், திருவொற்றியூா் ஆகிய பகுதிகளில் தலா 50 மி.மீ., கொளத்தூரில் 40 மி.மீ., மேலும் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட அளவு மழை பதிவானது. அதைத் தொடா்ந்து சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 22-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆற்காடில் 150 மி.மீ.: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடில் 150 மி.மீ. மழை பதிவானது. மேலும், அரக்கோணம் (ராணிப்பேட்டை) - 120 மி.மீ., கீழ்பென்னாத்தூா், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூா்) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.

புயல் சின்னம்: இதனிடையே, வட கா்நாடக மற்றும் கோவா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதன்கிழமை காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இந்த சுழற்சி இரவு அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (புயல் சின்னம்) வலுப்பெறும். தொடா்ந்து வடக்கு திசையில் நகா்ந்து, மே 23-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.மதுர... மேலும் பார்க்க

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி ... மேலும் பார்க்க

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா். தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து அந... மேலும் பார்க்க

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு... மேலும் பார்க்க