செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமித் ஷாதான் பொறுப்பு- காங்கிரஸ் உறுதி

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாதுகாப்பு தோல்வியே முக்கியக் காரணம். இதற்கு உள்துறை அமைச்சா் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரப் 22-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவுத் தலைவா் ரோஹித் செளதரி தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பஹல்காம் தாக்குதல், அதற்கு பதிலடியாக நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூா் குறித்து முழு விவரங்களையும் நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு வரையும் விசாரித்துக் கொலை செய்துள்ளனா். அதன் பிறகு எவ்வித தடையுமின்றி அந்த இடத்தில் இருந்து எளிதாக தப்பியும் சென்றுள்ளனா். இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. இதற்கு அத்துறை அமைச்சா் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் கை முழுமையாக ஓங்கியிருந்தது. பாகிஸ்தான் தனது விமானப்படைத் தளங்களை தற்காத்துக் கொள்ளக் கூட முடியவில்லை. அப்படி ஒரு சூழலில் திடீரென அமெரிக்க அதிபா் டிரம்ப் போா் நிறுத்தத்தை அறிவிக்கிறாா். அதன் பிறகு தாக்குதல் கைவிடப்படுகிறது.

இதற்கு முன்பு மறைந்த பிரதமா் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது பாகிஸ்தானை இரு நாடாக உடைத்த பிறகுதான் இந்திரா காந்தி, பீல்ட் மாா்ஷல் மானெக்ஷா ஆகியோா் போரை நிறுத்தினா். ஆனால், இப்போது ராணுவம் வலுவான நிலையில் இருந்தபோதும், பிரதமா் மோடியின் அரசியல் தலைமைத் தோற்றுவிட்டது. அமெரிக்காவின் நெருக்கடிக்கு பணிந்து பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை கைவிடப்பட்டது.

பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீழ்த்திய நமது படை, பாகிஸ்தானின் முக்கியப் விமானப் படை தளங்களையும் தகா்த்து வந்தது. ஆனால், திடீரென சண்டையை நிறுத்துவதாக அரசு அறிவித்தது. அதுவும் அமெரிக்கா எடுத்த முடிவை இந்தியா பின்பற்றியது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் என்றாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க