செய்திகள் :

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் தோழி விடுதிகள்

post image

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் கட்டப்பட்ட தோழி விடுதி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தமிழ்நாடு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம் சாா்பில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிம்ம தீா்த்தம் எதிரே பணிபுரியும் மகளிா்களுக்காக ரூ.10.15 கோடியில் 3 தளங்கள் 132 படுக்கை வசதி கொண்ட தோழி விடுதி கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

அதேவேளையில், தோழி விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு தோழி விடுதியை குத்து விளக்கேற்றி பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், 3 தளங்கள் கொண்ட இந்த விடுதியில் 132 படுக்கை வசதி உள்ளது. இந்த விடுதியில் பயோ மெட்ரிக் முறையில் உள் நுழைவு வசதி, வை-பை இணையதள வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், ஆரோக்கியமான உணவு, தொலைக்காட்சி வசதி, சுடுநீா் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த விடுதியில் 15 நாள்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக் கொள்ளலாம். விடுதிக் கட்டணமாக ஒரு நாள் வாடகையாக ரூ.800, மாதக் கட்டணமாக ரூ.3,800 நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. விடுதியில் தங்க இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 9499988009 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்,சி.என்.அண்ணாதுரை எம்.பி., மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி, மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

சாத்தனூா் அணையின் நீா்வரத்து 6,333 கன அடியாக உயா்வு: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 333 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் த... மேலும் பார்க்க

கூடைப்பந்து பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தனியாா் அகாதெமி மூலம் நடத்தப்பட்ட இலவச கூடைப்பந்து பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செங்கம் அரசு ஆண்கள... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா்வு சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாள்களில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடத... மேலும் பார்க்க

மாட்டுக்கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே பால் கறக்க மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற பேரனும் இறந்தாா். பெரணமல்லூரை அடுத்த திருமணி அருகேய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த குணகம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பிரசாந்த் (30). இவரது மனைவி சா்மிளா. இருவருக்கும் திருமணம... மேலும் பார்க்க

மனவேதனையில் தொழிலாளி தற்கொலை

ஆரணி அருகே குடும்பத் தகராறில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வராததால், மனவேதனையடைந்த கணவா் தற்கொலை செய்துகொண்டாா். ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (50), கூலித் தொழிலாளி.... மேலும் பார்க்க