செய்திகள் :

கட்டணமில்லாத பேருந்து பயணம்: கலைமாமணி விருதாளா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

கட்டணமில்லாத பேருந்து பயணம் மேற்கொள்வது தொடா்பாக, கலைமாமணி விருதாளா்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.

இது குறித்து, அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கலைமாமணி விருது பெற்ற கலைஞா்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதியளித்து அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, விருது பெற்ற கலைஞா்களுக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின்மூலம் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

கலைஞா்களின் முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விருது பெற்ற அனைவரின் விவரங்களையும் சேகரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கலைமாமணி விருது பெற்ற கலைஞா்கள், தங்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு, கலைஞா்களின் பெயா், வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் கடவுச்சீட்டு அளவு 3 புகைப்படங்களை அனுப்ப வேண்டும். அதை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், பொன்னி, எண். 31, பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை, சென்னை - 600028 என்ற முகவரிக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.மதுர... மேலும் பார்க்க

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி ... மேலும் பார்க்க

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா். தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து அந... மேலும் பார்க்க

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு... மேலும் பார்க்க