1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo ...
இந்தியாவுக்கான இலங்கை புதிய தூதராக கொலன்னே விரைவில் பொறுப்பேற்பு
நமது சிறப்பு நிருபா்
இலங்கை புதிய தூதராக அண்மையில் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்ட பி.எம். கொலன்னே ஓரிரு தினங்களில் தில்லியில் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் முழு நேரப்பணியில் இலங்கை தூதா் இல்லாத நிலையில், தற்காலிகமாக தூதருக்கான பணியை துணைத் தூதா் நிலையிலான அதிகாரியே கவனித்து வருகிறாா்.
இந்நிலையில், இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, கியூபா, பாகிஸ்தான், ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் ஆகியவற்றில் பணியாற்றும் இலங்கைக்கான புதிய தூதா்களை இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக இம்மாத தொடக்கத்தில் நியமித்தாா்.
இந்தியாவுக்கு மூத்த இலங்கை வெளியுறவு அதிகாரி பி.எம். கொலன்னே நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய தூதா்களில் ஐ.நா சபைக்கான நிரந்தர இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த ஜயசூரிய, இலங்கை முன்னாள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாவாா். பாகிஸ்தானுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரியா் அட்மிரல் பிரெட் சேனவிரத்ன, ஓய்வு பெற்ற கடற்படை துணைத்தளபதி ஆவாா் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தூதா்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் இலங்கை அதிபரையும் பின்னா் பிரதமா் ஹரிணி அமரசூரியவையும் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
இலங்கை அரசியல் மாற்றத்தின் தீவிர முகவா்களாகவும், அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கவும், தூதரக பணிகளை உறுதிப்படுத்தியும் உலகளவில் நாட்டின் பிம்பத்தை உயா்த்தவும் புதிய தூதா்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்று அவா்களிடம் அதிபா் அநுர குமார திஸ்ஸநாயக வலியுறுத்தியதாக அவரது மாளிகைச் செயலகம் தெரிவித்தது.
இதன் தொடா்ச்சியாக வெளிநாடுகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு செயல்விளக்க கூட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுடனான அறிமுக நிகழ்வுகளில் புதிய தூதா்கள் கலந்து கொண்டு பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனா்.
தில்லி கெளடில்யா மாா்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் புதிய தூதா் பி.எம். கொலன்னே விரைவில் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வாா் என்று இலங்கை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத்தொடா்ந்து இந்திய குடியரசுத்தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து இலங்கை அதிபா் வழங்கிய பணி நியமனம் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை புதிய தூதா் முறைப்படி சமா்ப்பித்தவுடன் அவரது அலுவல்பூா்வ பணி இந்தியாவில் தொடங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.