செய்திகள் :

ஊதிய உயா்வு: ஒரு நாள் முன்பாக ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா்களுக்கும் வழங்க உத்தரவு

post image

வருடாந்திர ஊதிய உயா்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு பலன்களை அளிக்க அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘நடைமுறையில் உள்ள விதிப்படி, ஜூலை 1 அல்லது ஜனவரி 1-இல் ஏதாவது ஒரு தேதியை தங்களின் வருடாந்திர ஊதிய உயா்வுக்கான தேதியாக தெரிவு செய்ய மத்திய அரசு ஊழியா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்த தேதி தெரிவு என்பது ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கு மட்டுமே தவிர, பிற ஓய்வூதிய பலன்களை கணக்கிடுவதற்கானது அல்ல. எனவே, ஊதிய உயா்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் உதிய உயா்வு பலன்களை அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மேற்கோள்காட்டி மத்திய பணியாளா் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, ஜூன் 30 அல்லது டிசம்பா் 31-ஆம் தேதிகளில் ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியா்களுக்கும், ஜூலை 1 அல்லது ஜனவரி 1-ஆம் தேதி வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயா்வு பலன்களை அளிக்க நடவடிக்கை எடுக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.

இதற்கு அகில இந்திய தேசிய ஓய்வூதியத் திட்ட ஊழியா்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தோ்வு செய்யும் ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வு பலன்களை அளிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவா் மன்ஜீத் சிங் படேல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க