மாநில அரசின் 'துணைவேந்தர் நியமன' அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அப்போது ஓர் அறையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூன்று மாநில உயா்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு, குற்றச்சாட்டை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்தது.
இதைத்தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி விலகுமாறு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால் பதவி விலக நீதிபதி வா்மா மறுத்த நிலையில், அவரை பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா பரிந்துரை வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், யஷ்வந்த் வர்மா மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவா் மீது வழக்குப் பதிந்து குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுக்களை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ”குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கையை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு தலைமை நீதிபதி அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கும் தெரியாது.
ஆகையால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசையே அணுக முடியும். அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முறையிடலாம். தற்போதைக்கு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.
மேலும், 4 மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.