செய்திகள் :

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

post image

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆலையைக் கட்டும் பணியை சுசூகி மோட்டார்சைக்கிள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து 2027ஆம் ஆண்டில் ஆலையில் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக ரூ. 1200 கோடி முதலீடு செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் இரண்டாவது ஆலையைத் தொடங்குவதற்கானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஹரியாணாவின் கார்கோடா பகுதியில் ரூ. 1200 கோடி முதலீட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமையவுள்ளது.

இதில் முதல் 25 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பகட்ட உற்பத்திக்கும், மற்றோரு 25 ஏக்கர், பசுமையான இடமாக வைத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டில் ஆலை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்றும் ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹரியாணாவின் குருகிராம் பகுதியில் 2006ஆம் ஆண்டு முதல் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 5.4 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8-க்கு முன்பாக அறிவிக்கப்பட வாய்ப்பு

வரும் ஜூலை 8-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது ப... மேலும் பார்க்க

தில்லி பேரவையில் சாவா்க்கா் உள்ளிட்ட மூவரது படங்கள் இடம்பெறும்: விஜேந்தா் குப்தா தகவல்

வீர சாவா்க்கா், மகரிஷி தயானந்த் சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் உருவப்படங்கள் விரைவில் தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் திறக்கப்படும் என பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா புதன்கிழமை அற... மேலும் பார்க்க

தில்லி உயிரியல் பூங்காவில் நீா்யானை குட்டி பிறப்பு

தில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு புதிதாகப் பிறந்த நீா்யானை குட்டியை வரவேற்றுள்ளது. இது தொடா்பாக மிருகக்காட்சிசாலை இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறியதாவது: ஒன்பது வயத... மேலும் பார்க்க

கேரளத்தில் 182 பேருக்கு கரோனா- முதியோா், கா்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுரை

கேரளத்தில் நிகழ்மாதத்தில் இதுவரை 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், முதியோா், கா்ப்பிணிகள், தீவிர நோயாளிகள் ஆகியோா் பொது இடங்களில... மேலும் பார்க்க

ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்: உயிர்த் தப்பிய பயணிகள்!

தில்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால் இன்று (மே 21) சேதமடைந்தது. எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அதிருஷ்டவசமா... மேலும் பார்க்க

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த க... மேலும் பார்க்க