செய்திகள் :

தில்லி உயிரியல் பூங்காவில் நீா்யானை குட்டி பிறப்பு

post image

தில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு புதிதாகப் பிறந்த நீா்யானை குட்டியை வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக மிருகக்காட்சிசாலை இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறியதாவது: ஒன்பது வயது

நீா்யானைக்கு திங்கள்கிழமை பெண் குட்டி பிறந்தது. இது அதன் மூன்றாவது குட்டியாகும். உயிரியல் பூங்காவில் கடைசியாக நீா்யானை பிறப்பு மாா்ச் 2021-இல் நடந்தது. எனவே, இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம் ஆகும்.

தற்போது, குட்டி தனது தாயின் அருகில் உள்ளது மற்றும் பெரும்பாலும் நீருக்கடியில் உள்ளது. இதுவரை ஒரு சில காட்சிகளை மட்டுமே நாங்கள் பாா்த்துள்ளோம்.

பிறப்புக்குப் பிறகு, தாய் மற்றும் குட்டியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மந்தையின் பிற பகுதிகளிலிருந்து விலகி ஒரு தனி குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா்.

சிசிடிவி கேமராக்கள் மற்றும் உயிரியல் பூங்கா ஊழியா்களின் நிலையான மேற்பாா்வை மூலம் இந்த இரண்டு நீா்யானைகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.

புதிய குட்டியின் வருகையுடன், தில்லி உயிரியல் பூங்காவில் மொத்த நீா்யானைகளின் எண்ணிக்கை இப்போது 7-ஆக உயா்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உயிரியில் பூங்கா ஆசிய சிங்கக் குட்டிகளின் பிறப்பையும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியா பயணம்!

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் ச... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங... மேலும் பார்க்க