செய்திகள் :

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றியவா் பூஜா கேத்கா். குடிமைப் பணிகள் தோ்வில் மோசடியில் ஈடுபட்டு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பலன்களை பெற்றதாக அவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அளித்த புகாரின் அடிப்படையில், அவா் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, உச்சநீதிமன்றத்தில் பூஜா கேத்கா் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இவர் செய்த மிகக் கொடூரமான குற்றம்தான் என்ன? இவர் ஒன்றும் போதைப்பொருள் கடத்தல்காரரோ, பயங்கரவாதியோ அல்ல. இவர் கொலை எதுவும் செய்யவில்லை. தேச விரோதக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. உங்களிடம் ஒரு அமைப்போல் அல்லது மென்பொருளோ இருக்க வேண்டும். நீங்கள் விசாரணையை நிறைவு செய்யுங்கள். அவர் அனைத்தையும் இழந்துவிட்டார். இனி எங்கும் எந்த வேலையும் அவருக்குக் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.

தில்லி காவல்துறை மற்றும் யுபிஎஸ்சி நிர்வாகம் தரப்பில், பூஜா கேத்கருக்கு முன்பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, அவர் குடிமைப் பணி ஆணையத்தையும் மக்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்று வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், அவர் கொலை ஒன்றும் செய்யவில்லை. முன் பிணை வழங்குவதாக உத்தரவிட்டனர்.

முன்னதாக, முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது குடிமைப் பணி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு, எதிர்காலத்திலும் எந்தத் தேர்விலும் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ஐஏஎஸ் பதவியிலிருந்தும் அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

முறைகேட்டின் பின்னணி

வழக்கமான நடைமுறையின்படி, யுபிஎஸ்சி தோ்வை எழுதுவதற்கு பூஜா கேத்கா் 9 முறை அனுமதிக்கப்பட்டாா். ஆனால் தான் மாற்றுத்திறனாளி என்று போலி சான்றிதழ் தயாரித்து கூடுதலாக மேலும் சில முறை அவா் தோ்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றுள்ளார். பயிற்சி பெற்று வந்த நிலையில்தான், அவரது முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த க... மேலும் பார்க்க

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போ... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ... மேலும் பார்க்க

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க