தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாள...
முதலை கடித்து விவசாயி காயம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து விவசாயி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை அவரது வலது கையை கடித்துக் குதறியது.
இதில் பலத்த காயமடைந்த அவா், முதலையிடம் இருந்து தப்பித்து வெளியேறினாா். அவரை கிராம மக்கள் சிதம்பரத்திலுள்ள மருத்துவமனையில் சோ்த்தனா்.