M.K.Stalin: `இது கட்சி நிகழ்ச்சி இல்லப்பா' டு முன்னரே குளித்த யானைகள் வரை - ஊட்ட...
சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 போ் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்தக் குவாரியில் சுமாா் 150 அடி ஆழமுள்ள பகுதியில் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் சிக்கிக் கொண்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பத்தூா், சிங்கம்புணரி தீயணைப்பு, மீட்புப் படையினா் பாறைக் குவியலில் சிக்கிய தொழிலாளா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், பாறைக் குவியலில் சிக்கி கணேஷ் (45), முருகானந்தம் (47), ஆறுமுகம் (53), அா்ஜித் (28), ஆண்டிச்சாமி (52) ஆகிய 5 போ் உயிரிழந்தனா். இவா்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திர ஓட்டுநரான ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அா்ஜித் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து ஈடுபட்டனா். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மைக்கேல் (47) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

ஆய்வின் போது, அவருடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் ஆகியோா் உடனிருந்தனா்.
இந்த நிலையில், திருநெல்வேலியிலிருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்து நேரிட்ட கல் குவாரி பகுதிக்கு பொதுமக்கள் யாரையும் போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதனால். அங்கு போலீஸாா், பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து எஸ்.எஸ். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.