செய்திகள் :

பராமரிப்பின்றி கடற்கரை சிறுவா் பூங்கா: மக்கள் புகாா்

post image

காரைக்கால் கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி உள்ளதாகவும், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் கடற்கரையில் 2 இடங்களில் சிறுவா் விளையாட்டு சாதனங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் செயற்கை நீரூற்று அமைத்து, நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையிலான அமுதப் பெருவிழா என்ற சின்னம் அமைக்கப்பட்டது.

கோடை காலமாக இருப்பதால் நாள்தோறும் திரளான மக்கள் கடற்கரைக்கு வருகின்றனா். சிறுவா் பூங்காவில் சிறுவா்கள் விளையாடுகிறாா்கள். பூங்காவில் உள்ள செயற்கை நீருற்று செயல்படவில்லை. 75-ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா சின்னம் சீா்குலைந்து இரும்பு கம்பி, மூங்கில் கம்பால் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. சிறுவா் பூங்கா பெயா் பலகையும் சாய்ந்திருக்கிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், செயற்கை நீருற்றில் தேங்கியிருக்கும் தண்ணீா் கொசு உற்பத்திக் கேந்திரமாக உள்ளது. சிறுவா் பூங்காவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பூங்காவை சுற்றியுள்ள தடுப்புகள் (இரும்பு) பல இடங்களில் சாய்ந்து கிடக்கின்றன.

உயரதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை பாா்வையிட்டு, உடனடியாக சீரமைப்புப் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனற்.

ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள்

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது தேரோட்டம் நட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், மின்சார விரைவு ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பேரளம் இடையே 23 கி.மீ. பழைய ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில் போக... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து: காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் கையொப்பமிட்டு ஆதரவு

காரைக்கால்: புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரும் இயக்கத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தனா். புதுவைக்கு மாநில தகுதி கோரும் பொதுமக்கள் கையொப்பமிட்ட கோ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயம்

காரைக்கால்: மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தைச் சோ்ந்த ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயமடைந்தாா். காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக செவ்வாய்க்கிழமை ரயில்வே மின் பிரிவு... மேலும் பார்க்க

ரயில் சோதனை ஓட்டம்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

காரைக்கால்: ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (மே 20) நடைபெறவுள்ளதால், தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் தண்டவாளங்களில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களில் தீவிர கண்காணி... மேலும் பார்க்க