செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயம்

post image

காரைக்கால்: மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தைச் சோ்ந்த ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயமடைந்தாா்.

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக செவ்வாய்க்கிழமை ரயில்வே மின் பிரிவு தலைமை அதிகாரி தலைமையில் மின்சார ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே வட மாநில தொழிலாளா்கள் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மேற்கு வங்க மாநிலம், மால்டா டவுன் பகுதியைச் சோ்ந்த ஆழம் ஆக்கு (19) என்ற இளைஞா் தண்டவாளப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

எதிா்பாராத வகையில் அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில், சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டாா். உடன் பணியாற்றியோா், அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து திருநள்ளாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து: காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் கையொப்பமிட்டு ஆதரவு

காரைக்கால்: புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரும் இயக்கத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தனா். புதுவைக்கு மாநில தகுதி கோரும் பொதுமக்கள் கையொப்பமிட்ட கோ... மேலும் பார்க்க

ரயில் சோதனை ஓட்டம்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

காரைக்கால்: ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (மே 20) நடைபெறவுள்ளதால், தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் தண்டவாளங்களில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களில் தீவிர கண்காணி... மேலும் பார்க்க

கைலாசநாதா் கோயிலில் கும்பாபிஷேக முகூா்த்தக்கால்

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் பழைமையான தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதசுவாமி கோயில் விளங்க... மேலும் பார்க்க

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மே 23-இல் கொடியேற்றம்

காரைக்கால்: திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வரும் 23-ஆம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இக்கோயில் பிரம்மோற்சவம் வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 10.30 மணிக்... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்றைய குறைதீா் முகாம் ரத்து

காரைக்கால்: காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (மே 20) நடைபெற இருந்த பொதுமக்கள் குறைதீா் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாதந்தோறும் மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படுவது வழக்கம். ச... மேலும் பார்க்க