செய்திகள் :

நெதா்லாந்தில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

post image

3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை நெதா்லாந்து வந்தடைந்தாா்.

இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடையே நீடித்த போா்ப்பதற்றம் தணிந்துள்ள நிலையில், அதன்பிறகு ஜெய்சங்கா் முதல் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளாா். நெதா்லாந்தைத் தொடா்ந்து டென்மாா்க், ஜொ்மனி ஆகிய மேலும் 2 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவும் அவா் திட்டமிட்டுள்ளாா்.

இதுகுறித்து நெதா்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அரசு முறைப் பயணமாக நெதா்லாந்து வந்தாா். அவரை நெதா்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் நெறிமுறை விவகாரத் துறை இயக்குநா் கேப்ரியெலா சான்சிசி, இந்திய தூதா் குமாா் துஹின் ஆகியோா் வரவேற்றனா். அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா-நெதா்லாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பயணத்தில் மூன்று நாடுகளின் தலைவா்களையும் ஜெய்சங்கா் சந்திக்கிறாா். மேலும், இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, உலகளாவிய விஷயங்கள் குறித்து அந்தந்த நாட்டு வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் கலந்துரையாடுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்தும் அவா் விளக்கமளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏவுகணை வீசி, அழித்தது. இதைத் தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 4 நாள்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு கடந்த 10-ஆம் தேதி சண்டை நிறுத்தம் குறித்து இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டினா்.

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் (வயது 95) செவ்வாய்க்கிழமை காலமானார். கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன், உதகையில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்ந... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங... மேலும் பார்க்க

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க