செய்திகள் :

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

post image

லிஸ்பன்: போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்களின் தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் நடத்திய கோழைத்தனமான போராட்டத்தை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை போன்று உறுதியாக எதிா்கொண்டோம்.

இத்தகைய எரிச்சலூட்டும் செயல்களால் இந்தியாவை அச்சுறுத்த முடியாது. எங்கள் உறுதி அசைக்க முடியாதது. தூதரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்த போா்ச்சுகல் அரசுக்கும், காவல் துறைக்கும் நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள்மீது இந்தியா கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை தாக்குதல்களை நடத்தியது.

இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே உண்டான மோதலால் போா்ப்பதற்றம் நிலவியது. 4 நாள்களுக்குப் பிறகு இருதரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, எல்லையில் அமைதி திரும்பியது.

இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு எதிராக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் போராட்டம் நடத்தியுள்ளனா்.

‘ஆபரேஷன் சிந்தூா் இன்னும் முடிவடையவில்லை என்ற அமைதியான ஆனால் வலுவான செய்தியுடன் போராட்டக்காரா்களை எதிா்கொண்டோம். அனைத்து தூதரக அதிகாரிகளும் இந்த அணுகுமுறையில் உறுதியாக இருந்தனா்’ என்று போா்ச்சுகலுக்கான இந்திய தூதா் புனீத் குண்டல் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவி: இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவும் இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அந்நாடு நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது... மேலும் பார்க்க

Untitled May 20, 2025 06:56 am

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை... மேலும் பார்க்க

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா். இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்... மேலும் பார்க்க

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இரங்கல்! பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அடைக்கலம்?

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (யுஜே... மேலும் பார்க்க

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடனுக்கு (82) சுக்கிலசுரப்பி (புராஸ்டேட்) புற்றுநோய் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோ... மேலும் பார்க்க

காஸா முழுவதையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தும்: நெதன்யாகு

காஸாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள விடியோ பதி... மேலும் பார்க்க