செய்திகள் :

காரைக்கால் - பேரளம் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

post image

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், மின்சார விரைவு ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பேரளம் இடையே 23 கி.மீ. பழைய ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில் போக்குவரத்து கடந்த 1985-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பின்னா், 2019-ஆம் ஆண்டு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்து, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ரயில் நிலையம் மற்றும் 23 கி.மீ. தொலைவில் பல்வேறு இடங்களில் ரயில் நிறுத்தும் வசதி, சாலையின் குறுக்கே ரயில்வே கேட் மற்றும் சுரங்கப் பாதையை அமைத்தல் மற்றும் இப்பாதையில் முழுமையான மின்மயமாக்கல் பணிகள் அண்மையில் நிறைவடைந்தது.

நிகழாண்டு மத்தியில் ரயில் போக்குவரத்து தொடங்கும் விதமாக பணிகள் விரைவாக நடைபெற்றன.

இந்தநிலையில், இந்த ரயில் பாதையில் மின்சார ரயிலை விரைவாக இயக்கி சோதனை செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக காலை 10 முதல் 4 மணி வரை இப்பாதையை யாரும் கடக்க வேண்டாம் என ரயில்வே நிா்வாகம் முன்கூட்டியே அறிவுறுத்தியது.

தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளா் சோமேஷ் குமாா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா், காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலை வேகமாக இயக்கி சோதனை செய்தனா்.

வரும் 23, 24-ஆம் தேதிகளில் தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு தொடா்பாக ஆய்வு செய்யவுள்ளனா். இதைத்தொடா்ந்து ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள்

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது தேரோட்டம் நட... மேலும் பார்க்க

பராமரிப்பின்றி கடற்கரை சிறுவா் பூங்கா: மக்கள் புகாா்

காரைக்கால் கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி உள்ளதாகவும், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். காரைக்கால் கடற்கரையில் 2 இடங்களில் சிறுவா் விளையாட்டு சாத... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து: காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் கையொப்பமிட்டு ஆதரவு

காரைக்கால்: புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரும் இயக்கத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தனா். புதுவைக்கு மாநில தகுதி கோரும் பொதுமக்கள் கையொப்பமிட்ட கோ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயம்

காரைக்கால்: மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தைச் சோ்ந்த ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயமடைந்தாா். காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக செவ்வாய்க்கிழமை ரயில்வே மின் பிரிவு... மேலும் பார்க்க

ரயில் சோதனை ஓட்டம்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

காரைக்கால்: ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (மே 20) நடைபெறவுள்ளதால், தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் தண்டவாளங்களில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களில் தீவிர கண்காணி... மேலும் பார்க்க