செய்திகள் :

Ranya Rao: கிட்டிய ஜாமீன்; ஆனாலும் ரன்யா ராவால் வெளியே வர முடியாது! - விவரம் என்ன?

post image

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 1974 (COFEPOSA) வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் அவர், தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுவரை நடிகை ரன்யாவிடமிருந்து மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரன்யா ராவ்

நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் கர்நாடக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து. அந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் நடிகை ரன்யா ராவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

இது தொடர்பான உத்தரவில், ``ரன்யா ராவ் மற்றும் கொண்டராஜு இருவரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. இது போன்ற குற்றத்தைச் செய்யக் கூடாது. அனைத்து விசாரணை தேதிகளிலும் விதிவிலக்கு இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நடந்து வரும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். ஆதாரங்களை சிதைக்கவோ அல்லது சாட்சிகளை மாற்றவோ முயற்சி செய்யக் கூடாது. இருவருக்கும் தலா இரண்டு லட்சம் பிணைத் தொகை செலுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ரன்யா ராவ்

இது தொடர்பாக ரன்யா ராவின் வழக்கறிஞர் பி.எஸ். கிரிஷ், "ரன்யா ராவுக்கு ஜாமீன் கிடைத்தாலும்கூட அவர் விடுவிக்கப்பட மாட்டார். ஏனெனில் அவர் மீது அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரன்யா ராவின் பெற்றோர் கர்நாடக் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்" என்றார்.

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்த... மேலும் பார்க்க

ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்கிய பெண்!

மத்திய பிரதேச மாநிலம், சவாய் மாதோபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவருக்கு அனுராதா பஸ்வான் என்ற பெண்ணை பேசி முடித்து திருமணம் செய்தனர். திருமணம் இந்து முறைப்படி நடந்தது. பப்பு என்ற புரோக்கர் ... மேலும் பார்க்க

`காலையில் தொழிலாளி, இரவில் கொலையாளி’ ; தோட்டத்து வீடு கொலைகள் - சிக்கிய நால்வரின் பகீர் பின்னணி

ஈரோடு மற்றும் திருப்பூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்ற நிலையில், அது தொடர்பாக ஈரோடு தனிப்படை போலீஸார் மூன்று தென்னை தொழிலாளிகள், நகைக்கடை... மேலும் பார்க்க

டெல்லி செல்வதாகத்தான் சொன்னார்; ஆனால் பாகிஸ்தான் சென்றது பற்றி... - யூடியூபர் ஜோதியின் தந்தை தகவல்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனல் நடத்தும் அவர் பாகிஸ்தான் தூதர அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததோ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காருடன் இளைஞர் எரித்துக் கொலை; போலீஸார் தீவிர விசாரணை

தூத்துக்குடி – நெல்லை நான்கு வழிச்சாலையில் வல்லநாடு துப்பாக்கிச்சுடும் தளம் உள்ளது. இதன் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்திற்கு செல்லும் பாதையில் நான்குவழிச்சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொல... மேலும் பார்க்க

``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புகார் கொடுத்த தாய்

"என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விபத்து வழக்கை சந்தேக மரண வழக்காக பதிவு செய்து என் மருமகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இறந்தவரின் தாயார் தென்மண்டல ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ள சம்... மேலும் பார்க்க