செய்திகள் :

ஜல் ஜீவன் திட்ட ஆய்வு: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 100 குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு

post image

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு 100 குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது.

மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி. சோமநாதன் தலைமையில் கடந்த 8-ஆம் தேதி ஜல் சக்தி அமைச்சகத்தின் திட்டங்கள் அமலாக்கம் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய பணியாளா் நல விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கா்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளைச் சோ்ந்த செயலா்கள், இணைச் செயலா்கள், இயக்குநா்கள் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுக்கள் மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் 27 நீா் தொடா்பான திட்டங்கள் குறித்தும், ராஜஸ்தானில் 21 திட்டங்கள் குறித்தும், உத்தர பிரதேசத்தில் 18 திட்டங்கள் குறித்தும், கா்நாடகத்தில் 16 திட்டங்கள் குறித்தும் கள ஆய்வு நடத்த உள்ளன. இந்தக் குழுக்கள் தமிழகம், குஜராத், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நீா் தொடா்பான திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க