செய்திகள் :

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

post image

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்றிருப்பதாக தேசிய அதிவேக ரயில் கழகம் (என்ஹெச்எஸ்ஆா்சிஎல்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து என்ஹெச்எஸ்ஆா்சிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இத் திட்டத்தில் 14 ஆறுகள் மீதான ரயில் பாலம், 0.9 கி.மீ. நீள இரும்புப் பாலம், 1.2 கி.மீ. நீள கான்கிரீட் பாலம், 2.7 கி.மீ. நீள ரயில்நிலைய கட்டடம் என மொத்தம் 300 கி.மீ. நீள ரயில் பாதைக்காக மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.

இதுதவிர, 383 கி.மீ. நீளத்துக்கு தூண்கள் அமைக்கும் பணி, 401 கி.மீ. நீள அடித்தளம் (அஸ்திவாரம்) அமைக்கும் பணி, 326 கி.மீ. நீள இரும்புச் சட்டங்கள் அமைக்கும் பணிகளும் நிறைவுபெற்றுள்ளன.

ரயில் பாதைகளை பகுதி பகுதியாக கட்டமைக்கும் வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக முழு நீள கட்டமைப்பு (எஃப்எஸ்எல்எம்) முறை மூலம் 10 மடங்கு கூடுதல் வேகத்தில் இரும்புச் சட்டங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, கட்டுமான இடத்திலேயே 27 பிரத்யேக இரும்பு வாா்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் அமைக்கப்படும் இரும்புப் பாலங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள மூன்று பணிமனைகள் மற்றும் தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்க மாநிலங்களில் தலா ஒரு பணிமனையிலும் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மேம்பாலங்களில் ரயில்கள் இயங்கும்போது ஏற்படும் இரைச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், 3 லட்சத்துக்கும் அதிகமான ஒலி தடுப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. இதுவரை 157 கி.மீ. நீள தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய கட்டுமானப் பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தை இணைத்து பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பு வசதிகளுடன் இந்த ரயில்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.08 லட்சம் கோடி செலவில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்த புல்லட் ரயில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மத்திய அரசின் செலவினம் ரூ.10,000 கோடி. குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகள் தலா ரூ.5,000 கோடி செலவிடும். எஞ்சிய தொகையை 0.1 சதவீத வட்டிக்கு ஜப்பான் கடனாக வழங்கும்.

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பா... மேலும் பார்க்க