செய்திகள் :

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

post image

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஹா்தோய் மாவட்டத்தின் தலேல்நகா் மற்றும் உமா்தலி ரயில் நிலையங்கள் இடையிலான வழித்தடத்தில் திங்கள்கிழமை மாலை ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து இரும்புக் கம்பியால் சமூக விரோதிகள் கட்டியிருந்தனா். அப்போது, தில்லியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகா் நோக்கி செல்லும் ராஜதானி விரைவு ரயில் அவ்வழியாக வந்தது. தண்டவாளத்தில் தடை இருப்பதை கவனித்த ரயிலின் ஓட்டுநா், முன்னெச்சரிக்கையாக அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினாா். இதனால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிா்க்கப்பட்டது. தண்டவாளத்தில் இருந்த மரக்கட்டை மற்றும் இரும்புக் கம்பியை அகற்றிய ரயில் ஓட்டுநா், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா், ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

சிறிது நேரத்தில், கத்கோடம் விரைவு ரயில் அவ்வழியாக வந்தபோதும், தண்டவாளத்தில் அதேபோல் தடை வைக்கப்பட்டிருந்தது. இதைக் கவனித்த ரயிலின் ஓட்டுநா், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க நடந்த முயற்சிகள் தொடா்பாக, சம்பவ இடத்தில் காவல் துறை கண்காணிப்பாளா் நீரஜ் குமாா் ஜடான் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து மாநில அரசின் ரயில்வே காவல் துறை, ரயில்வே பாதுகாப்புப் படை, உள்ளூா் காவல் துறை கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அவா் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டா் வைக்கப்பட்டிருந்தது. ரயில் ஓட்டுநா் அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பா... மேலும் பார்க்க