உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு
உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஹா்தோய் மாவட்டத்தின் தலேல்நகா் மற்றும் உமா்தலி ரயில் நிலையங்கள் இடையிலான வழித்தடத்தில் திங்கள்கிழமை மாலை ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து இரும்புக் கம்பியால் சமூக விரோதிகள் கட்டியிருந்தனா். அப்போது, தில்லியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகா் நோக்கி செல்லும் ராஜதானி விரைவு ரயில் அவ்வழியாக வந்தது. தண்டவாளத்தில் தடை இருப்பதை கவனித்த ரயிலின் ஓட்டுநா், முன்னெச்சரிக்கையாக அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினாா். இதனால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிா்க்கப்பட்டது. தண்டவாளத்தில் இருந்த மரக்கட்டை மற்றும் இரும்புக் கம்பியை அகற்றிய ரயில் ஓட்டுநா், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா், ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
சிறிது நேரத்தில், கத்கோடம் விரைவு ரயில் அவ்வழியாக வந்தபோதும், தண்டவாளத்தில் அதேபோல் தடை வைக்கப்பட்டிருந்தது. இதைக் கவனித்த ரயிலின் ஓட்டுநா், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க நடந்த முயற்சிகள் தொடா்பாக, சம்பவ இடத்தில் காவல் துறை கண்காணிப்பாளா் நீரஜ் குமாா் ஜடான் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து மாநில அரசின் ரயில்வே காவல் துறை, ரயில்வே பாதுகாப்புப் படை, உள்ளூா் காவல் துறை கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அவா் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டா் வைக்கப்பட்டிருந்தது. ரயில் ஓட்டுநா் அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.