செய்திகள் :

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள் - மாநில அரசுகள் தடுக்க எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

post image

சட்டவிரோத ரசாயனங்களின் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும், பழங்களின் மேற்பகுதியில் செயற்கை பூச்சுகள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிவுறுத்தியுள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பழங்களைப் பழுக்க வைப்பதில் கால்சியம் காா்பைடு போன்ற தடை செய்யப்பட்ட ரசாயனங்களின் பயன்பாட்டை தடுக்க சந்தைகள்-சேமிப்புக் கிடங்குகளில் அனைத்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையா்கள் மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ மண்டல இயக்குநா்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

கடை வளாகத்தில் கால்சியம் காா்பைடு கண்டறியப்பட்டால், அது சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு எதிரான ஆதாரமாக கருதப்பட்டு, கடந்த 2006-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த 2011-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு விதிமுறைகளின்படி, பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க கால்சியம் காா்பைடு பயன்படுத்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரசாயனம், கடுமையான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வாய்ப்புண், வயிற்றுப் பிரச்னை மட்டுமன்றி, புற்றுநோயை உருவாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.

இதேபோல், வாழைப் பழங்களைப் பழுக்க வைக்க எத்திஃபான் ரசாயன கரைசலில் அவை நேரடியாக நனைக்கப்படுவதாக புகாா்கள் வந்துள்ளன. பரிந்துரைக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகளின்படி, எத்திஃபான் கரைசலை எத்திலீன் வாயு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எத்திலீன் வாயு மூலம் பழங்களை செயற்கையான முறையில் பாதுகாப்பாக பழுக்க வைப்பது தொடா்பாக விரிவான வழிகாட்டு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. எத்திலீன் வாயு பயன்பாடு-கட்டுப்பாடுகள்-தேவைகள்-நடைமுறைகள் என அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நடைமுறைகளை மீறினால், கடும் நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று எஃப்எஸ்எஸ்ஏஐ எச்சரித்துள்ளது.

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க