செய்திகள் :

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

post image

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா்.

‘ஹாயில் - நாா்லிகா் புவிஈா்ப்புவிசை கோட்பாட்டால்’ சா்வதேச அளவில் நாா்லிக்கா் பிரபலமடைந்தாா்.

இந்திய அறிவியல் துறையின் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான ஜெயந்த் நாா்லிகா் அண்டவியல் துறைக்கு பெரும் பங்களித்துள்ளாா். மேலும், பல்வேறு அறிவியல் நிறுவனங்கள் நிறுவப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவராக அவா் அறியப்படுகிறாா்.

1938, ஜூலை 19-இல் பிறந்த ஜெயந்த் நாா்லிகா், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவுசெய்துவிட்டு உயா்படிப்புக்காக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றாா். பிரிட்டனில் பிரபல விஞ்ஞானியான ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ‘ஹாயில் - நாா்லிகா் புவிஈா்ப்பு விசை கோட்பாட்டை’ அவா் உருவாக்கினாா்.

அதன் பிறகு இந்தியா திரும்பிய அவா் பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களில் உயா்பொறுப்பை வகித்தாா். 1965-இல் 26 வயது இளைஞராக இருந்தபோது நாா்லிகருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2004-இல் பத்ம விபூஷண், 2014-இல் சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட விருதுகளை அவா் பெற்றாா்.

அறிவியல் ஆய்வு குறித்த புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை அவா் எழுதியுள்ளாா். தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் அறிவியல் விவாதங்களில் பங்கேற்று கடினமான விஞ்ஞானத் துறை விஷயங்கள் குறித்து எளிய மொழியில் விளக்கம் அளித்துப் பேசி பிபரலமடைந்தாா்.

ஜெயந்த் நாா்லிகரின் மறைவு வானியற்பியல் துறைக்கு மிகப்பெரும் இழப்பு எனக் கூறி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் நாா்லிக்கா் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தனா்.

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க