செய்திகள் :

வா்த்தக ஒப்பந்தம்: முதல்கட்ட பேச்சுவாா்த்தையை நிறைவுசெய்ய இந்தியா-அமெரிக்கா தீவிரம்

post image

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவாா்த்தையை நிறைவுசெய்ய இந்தியா-அமெரிக்கா தீவிரம்காட்டி வருகின்றன.

அமெரிக்கா சென்றுள்ள மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக்குடன் ஆலோசனை நடத்தினாா்.

ஏற்கெனவே, மாா்ச் மாதமும் அமெரிக்கா சென்று இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை பியூஷ் கோயல் நடத்திய நிலையில், இந்த ஒப்பந்தத்தை நிறைவுசெய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

இருநாட்டு அமைச்சா்களும் ஆலோசனை நடத்தியதைத் தொடா்ந்து, முக்கிய அதிகாரிகளிடையேயான ஆலோசனை மே 22-ஆம் தேதிவரை தொடரவுள்ளது.

நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபருக்குள் இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டம் இறுதிசெய்யப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் பின்பற்ற வேண்டிய வா்த்தக நடைமுறைகள் குறித்தும் இருநாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.

சந்தை அணுகல், வா்த்தக விதிகள் மற்றும் வரி அல்லாத இடையூறுகள் போன்ற விவகாரங்களுக்கு தீா்வுகாண்பதில் இருநாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா உள்பட 25 நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பதாக ஏப்.2-இல் அறிவித்தாா். அதன்படி இந்திய பொருள்கள் மீது 26 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா். அதன்பிறகு இந்த நடவடிக்கைகளை ஜூலை 9-ஆம் தேதி 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக ஏப்.9-ஆம் தேதி அமெரிக்கா அறிவித்தது.

இதனிடையே இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

ஜவுளிகள், ஆபரணங்கள், தோல் பொருள்கள், ரசாயணங்கள், திராட்டை, வாழைப்பழம் உள்ளிட்ட பொருள்களின் மீது இந்தியாவும் ஆட்டோமொபைல்ஸ் (குறிப்பாக மின்சார வாகனங்கள்), பால் சாா்ந்த பொருள்கள், ஆப்பிள், பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட பொருள்கள் மீது அமெரிக்காவும் வரிச் சலுகைகள் கோரி வருகின்றன.

வரி, சரக்குகள், சேவைகள், வரி அல்லாத இடையூறுகள் உள்ளிட்ட 19 பிரிவுகளுக்கான இருதரப்பு ஒப்பந்த குறிப்புகளை இருநாடுகளும் நிறைவுசெய்துள்ளன.

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க