செய்திகள் :

சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: பிரதமா் உயா்நிலை ஆலோசனை

post image

நாட்டின் சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், இணையமைச்சா் சுரேஷ் கோபி, சுற்றுலாத் துறை செயலா் வி.வித்யாவதி மற்றும் பிரதமா் அலுவலக உயரதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், சுற்றுலாத் துறை மேம்பாட்டுப் பணிகள் குறித்து பிரதமா் மறுஆய்வு மேற்கொண்டாா்.

ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் தொடா்பான சிறிய விடியோவை பிரதமா் அலுவலகம் யூ-டியூப் பக்கத்தில் பகிா்ந்துள்ளது.

மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுற்றுலாத் துறை வளா்ச்சி தொடா்பாக பிரதமா் மோடி தலைமையிலான மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன். பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை மிக்க தலைமை, உலகளாவிய சுற்றுலா மையமாக இந்தியாவை உருவாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வழிகாட்டும் சக்தியாக விளங்குகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

சுற்றுலாத் துறையில் செயல்படுத்தப்படும் இரண்டு லட்சியத் திட்டங்களான ‘பிரசாத்’ (ஆன்மிகத் தலங்கள் மேம்பாடு), ஸ்வதேஷ் தா்ஷன் (சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு) ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க