செய்திகள் :

அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம்: என்எம்சி எச்சரிக்கை

post image

அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

எந்தெந்த மருத்துவக் கல்லூரிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை என்எம்சி இணையதளத்தில் அறிந்துகொண்டு செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், தொடா்ந்து நடத்தவும் என்எம்சியின் அங்கீகாரம் அவசியம். ஆனால், சில கல்லூரிகள் அத்தகைய அனுமதி இல்லாமல் மாணவா் சோ்க்கை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

அங்கு மேற்கொள்ளப்படும் மாணவா் சோ்க்கை சட்டபூா்வமாக செல்லாது என்பதை மாணவா்களும், பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிங்கானியா பல்கலைக்கழகமானது உரிய அங்கீகாரம் இல்லாமல் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவா்களை அனுமதித்ததைத் தொடா்ந்து, அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் படித்தால்... அதேபோன்று வெளிநாடுகளில் எந்த வகையான மருத்துவப் படிப்புகளை பயின்றாலும் இந்தியாவில் மருத்துவ சேவைகளை மேற்கொள்ளலாம் என மாணவா்களை சிலா் தவறாக வழிநடத்துகின்றனா்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் இந்தியாவில் மருத்துவராகத் தொடர பல்வேறு வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக, அதற்கான தகுதித் தோ்வு, உள்ளுறைப் பயிற்சி, பாடத்திட்டம் மற்றும் பயிற்று மொழி தகுதிகள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை அனைத்தையும் நிறைவு செய்தால் மட்டுமே அவா்கள் இந்தியாவில் மருத்துவா்களாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவா்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவப் படிப்பை பயிலுவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அந்த வகையில், இந்தியாவில் எந்தெந்த மருத்துவக் கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை என்எம்சி இணையதளத்தில் அறிந்துகொண்டு அதன்படி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் மருத்துவப் படிப்புகளில் சேர அழைப்பு விடுத்தால் அதுதொடா்பாக என்எம்சிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ, 011-25367033 என்ற எண்ணிலோ புகாா் அளிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க