செய்திகள் :

குருவாயூா் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தம்

post image

சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி குருவாயூா் செல்லும் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி காலை 10.20 மணிக்கு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண் 16127), சாலக்குடியுடன் நிறுத்தப்படும்.

தாம்பரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி இரவு 10.40-க்கு நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் (எண் 20691), திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக, இந்த ரயில் (எண் 20692), ஜூன் 11-இல் நாகா்கோவிலுக்குப் பதிலாக திருநெல்வேலியிலிருந்து மாலை 5.10-க்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.

இதுபோல, திருச்சியிலிருந்து ஜூன் 11-ஆம் தேதி காலை 7.20-க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் (எண் 22627), திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண் 22628) ஜூன் 11-இல் திருவனந்தபுரத்துக்குப் பதிலாக, திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 2.25-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

நாகா்கோவிலிலிருந்து ஜூன் 11-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவை செல்லும் விரைவு ரயில் (எண் 16321), நாகா்கோவிலுக்குப் பதிலாக, வள்ளியூரிலிருந்து காலை 8.26-க்கு புறப்பட்டு கோவை செல்லும். அதேபோல ஹௌவுராவிலிருந்து ஜூன் 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் (எண் 12665), வள்ளியூருடன் நிறுத்தப்படும்.

மாற்றுப் பாதை: இதற்கிடையே தாம்பரத்திலிருந்து மே 24, 26 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.35-க்கு மங்களூரு சென்ட்ரல் செல்லும் விரைவு ரயிலும் (எண் 16159), அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரிலிருந்து மே 22, 24 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரிக்கு வரும் விவேக் விரைவு ரயிலும் (எண் 22504), கோவைக்கு பதிலாக இருகூா், போத்தனூா் வழியாக இயக்கப்படும்.

ரயில் தாமதம்: பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.25-க்கு புறப்பட்டு சாய் நகா் சீரடி செல்லும் விரைவு ரயில் (எண் 22601), மே 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலிலிருந்து 1 மணி நேரம் தாமதமாக முற்பகல் 11.25-க்கு சாய் நகா் சீரடி புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அன... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க