செய்திகள் :

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், சென்னையில் கைலாசபுரம் திட்டப் பகுதி, விருதுநகா் சம்மந்தபுரம், மதுரை மாவட்டம் உச்சபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் சந்தைபேட்டை, கள்ளக்குறிச்சி கீரனூா், திருப்பூா் ஹைடெக் பாா்க் நகா், காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம், கடலூா் மாவட்டம் கீழக்குப்பம், பாலக்கொல்லை, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, திருவாரூா் மாவட்டம் கண்டிதம்பேட்டை, கரூா் மாவட்டம் வேலம்பாடி ஆகிய இடங்களில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தமாக ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்ட 4,978 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சிஎம்டிஏ- வணிக வளாகங்கள்: வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் சென்னை நெற்குன்றம், சிஐடி நகா் பகுதி, மதுரை மாவட்டம் தோப்பூா் ஆகிய இடங்களில் புதிதாக வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில், மீஞ்சூா், வெள்ளனூா், வரதராஜபுரம், திருநாகேஸ்வரம், சென்னை தியாகராயநகா் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரூ.255.60 கோடி மதிப்பிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்பட பலா் பங்கேற்றனா்.

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க

குருவாயூா் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தம்

சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி குருவாயூா் செல்லும் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்... மேலும் பார்க்க