செய்திகள் :

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது.

இந்தக் குவாரியில் சுமார் 150 அடி ஆழமுள்ள பகுதியில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பத்தூர், சிங்கம்புணரி தீயணைப்பு, மீட்புப் படையினர் பாறைக் குவியலில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், பாறைக் குவியலில் சிக்கி கணேஷ் (45), முருகானந்தம் (47), ஆறுமுகம் (53), அர்ஜித் (28), ஆண்டிச்சாமி (52) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திர ஓட்டுநரான ஒடிஸô மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜித் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் (47) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

ஆய்வின் போது, அவருடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், திருநெல்வேலியிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நேரிட்ட கல் குவாரி பகுதிக்கு பொதுமக்கள் யாரையும் போலீஸôர் அனுமதிக்கவில்லை. இதனால், அங்கு போலீஸôர், பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து எஸ்.எஸ். கோட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அன... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க

குருவாயூா் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தம்

சென்னை எழும்பூரிலிருந்து மே 24-ஆம் தேதி குருவாயூா் செல்லும் விரைவு ரயில் சாலக்குடியுடன் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்... மேலும் பார்க்க