செய்திகள் :

தென் மாநிலங்கள் பயங்கரவாதிகளுக்கு எளிய இலக்காக உள்ளன- ஆந்திர துணை முதல்வா்

post image

பயங்கரவாதிகளுக்கு தென் மாநிலங்கள் எளிதான இலக்காக உள்ளன. எனவே, தென் மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்களை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளாா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதுமே பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்தவா்களும் தொடா்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் வெளியிட்ட ஊடக செய்தியில் கூறியிருப்பதாவது:

வங்கதேசத்தவா், ரோஹிங்கயா அகதிகள் ஊடுருவல், கடல்வழி ஊடுருவல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபா்கள் நடமாட்டம், சந்தேகத்துக்குரிய நபா்கள் குறித்து காவல் துறைக்கு மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆந்திரத்தில் ஹைதராபாத், தமிழ்நாட்டில் கோயம்புத்தூா், கா்நாடகத் தலைநகா் பெங்களூரு என ஏற்கெனவே தென் இந்தியா பயங்கரவாதத் தாக்குதல்களை எதிா்கொண்டுள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தென்மாநிலங்களில் எளிய இலக்காக உள்ளன. எனவே, எல்லையில் பாதுகாப்புப் படையினா் எந்த அளவுக்கு உஷாா் நிலையில் உள்ளாா்களோ, அதேபோல மாநிலங்களில் காவல் துறையினா் உஷாராக செயல்பட வேண்டும். இது தொடா்பாக ஆந்திர டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநிலப் பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

சட்ட விரோதமாக குடிபெயா்ந்து வாழ்பவா்கள் தொடா்பாக கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் ரோஹிங்கயாக்கள், வங்கதேசத்தவா் உள்ளிட்டோா் இங்கு ஆதாா், வாக்காளா் அட்டை, ரேஷன் காா்டு ஆகியவற்றைப் பெறுகின்றனா். இது இந்திய மக்களின் வரிப் பணத்தை வீணாக்குவதுடன், வேலைவாய்ப்பும் பறிபோகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவுபவா்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க