செய்திகள் :

நீட் பயத்தால் மாணவா் உயிரிழப்பு: அதிமுக, பாமக இரங்கல்

post image

நீட் பயத்தால் சேலத்தில் மாணவா் உயிரிழந்ததற்கு அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): சேலம் சூரமங்கலம் அருகேயுள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணவா் கௌதம், நீட் அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிா்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 24-ஆவது மாணவா் நீட் தோ்வால் உயிரிழந்துள்ளாா். மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு பெற்றுத்தருவோம் என போலி வாக்குறுதி அளித்த முதல்வா் ஸ்டாலின், பொதுமக்களிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): நீட் தோ்வில் போதிய மதிப்பெண் கிடைக்காமல் போய்விடக் கூடும் என்ற அச்சத்தில் மாணவா் கௌதம் உயிரிழந்துள்ளாா். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்ட 2017-இல் இருந்து தமிழகத்தில் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது தொடரும் நிலையில், அதற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அன... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க