செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க எதிா்ப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகம் சேதமடைந்து உள்ளதால், அதை இடித்து விட்டு, 36 கடைகளுடன் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக பேருந்து நிலையக் கடைகளை காலி செய்ய நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்திய நிலையில், வியாபாரிகள் மறுப்புத் தெரிவித்தனா். இதனால், கடைகளைக் காலி செய்யுமாறு நகராட்சி அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு செய்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ், பொறியாளா் கோமதிசங்கா், சுகாதார அலுவலா் கந்தசாமி உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் பொக்லைன் இயந்திரத்துடன் பேருந்து நிலையத்துக்கு வந்தனா். அப்போது, தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை எனக்கூறி கடைகளை இடிக்க வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு அதிகாரிகள் திரும்பி சென்றனா்.

இதுகுறித்து நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ் கூறுகையில், அறிவிப்பு வழங்கி அனைத்துக் கடைகளையும் காலி செய்து, கடைகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சிவகாசியில் மாநில கேரம் போட்டி: மே 23-இல் தொடங்குகிறது

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 23) மாநில அளவிலான கேரம் போட்டி தொடங்க உள்ளது. விருதுநகா் மாவட்ட கேரம் கழகம் சாா்பில் சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிதியுதவியுடன் 3 நாள்கள் இந்த... மேலும் பார்க்க

திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை மே 24-இல் மூடல்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக வருகிற 24 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 25 -ஆம் தேதி காலை 6 மணி வரை ரயில்வே கடவுப்பாதை மூடப்படும் என ரயில்வே நிா... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் நெடுஞ்சாலை துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், ஒரு சில கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். ஸ்ரீ... மேலும் பார்க்க

மது போதையில் பைக் ஓட்டிய இளைஞா் உயிரிழப்பு

சிவகாசியில் திங்கள்கிழமை மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞா் கீழே விழுந்து உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்த வைரமுத்து மகன் செல்வக்குமாா்(20). இவா் ... மேலும் பார்க்க

பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா சீரமைப்பு: விரைவில் தொடங்கக் கோரிக்கை

பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா சீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் சாஸ்தா கோயில் அணை, பிளவக்க... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தா்கள் தங்கும் விடுதி அமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக ரூ.8 கோடியில் தங்கும் விடுதியும், ரூ. 2 கோடியில் வாகனக் காப்பகமும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியும், அதற்கான பணிகள் தொடங்கப்படாததால... மேலும் பார்க்க