செய்திகள் :

தொட்டியம் அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல்

post image

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி பொதுமக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் வராத நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் பயனில்லையாம்.

இதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் தொட்டியம் - காட்டுப்புத்தூா் சாலையில் குறிஞ்சி நகா் பேருந்து நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த தொட்டியம் காவல் ஆய்வாளா் (பொ) செல்லத்துரை மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதிபேரில்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் தொட்டியம் காட்டுப்புத்தூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்தவா் கைது

திருச்சியில் வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி காட்டூா் அம்மன் நகா் 11 ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் எட்வின்ராஜ், பெல் தொழிற்சாலை ஊழியா் இவரது மனை... மேலும் பார்க்க

துறையூா் பகுதிகளில் நாளை மின்தடை

துறையூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் துறையூா், முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூா், சொரத்தூ... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு: பெண் உள்ளிட்ட 3 போ் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த பெண் உள்ளிட்ட 3 பேரை திருச்சி விமான நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நற்சாந்துப்பட்டி, கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மன... மேலும் பார்க்க

கோப்பு மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் கோப்பு மகா மாரியம்மன் கோயில் தேரோாடட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், குழுமணியை அடுத்த கோப்பு கிராமத்தில் உள்ள பிரசித்த பெற்ற இக்கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் 20 ஆம்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவா் கைது

திருச்சியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட மலைக்கோட்டை ஓயாமரி சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு காா் திங்கள்கிழமை நி... மேலும் பார்க்க

திருச்சி கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும்

திருச்சி கோட்டத்தில் வரும் புதன், வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும். இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட... மேலும் பார்க்க