செய்திகள் :

கடவுச்சீட்டில் முறைகேடு: பெண் உள்ளிட்ட 3 போ் கைது

post image

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த பெண் உள்ளிட்ட 3 பேரை திருச்சி விமான நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நற்சாந்துப்பட்டி, கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி நிஷாலினி (36). இவா் ஞாயிற்றுக்கிழமை துபையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து, இலங்கை விமானத்தில் செல்லக் காத்திருந்தாா். அப்போது குடியேற்றப்பிரிவினா் அவரது ஆவணங்களை பரிசோதித்தனா்.

அதில் கடந்த 1998-ஆம் ஆண்டு இலங்கை கிளிநொச்சியிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டுக்கு வந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தங்கியிருந்த அவா், பின்னா் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு குடிபெயா்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை சமா்ப்பித்து இந்திய கடவுச்சீட்டு பெற்றதும், அதைக்கொண்டு இலங்கைக்கு பயணிக்க முயன்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நிஷாலினியை திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதேபோல தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள எட்டுப்புலிக்காடு, ஏம்பலூரைச் சோ்ந்தவா் மு. பாலசுப்பிரமணியன் (52). இவா் மலேசியாவில் இருந்து மலிண்டோ (பேட்டிக்) விமானம் மூலம் திருச்சிக்கு வந்தபோது அவா் தனது கடவுச்சீட்டில் பிறந்த தேதி மற்றும் முகவரியை மாற்றிப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

இதேபோல ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டையைச் சோ்ந்தவா் சே. அப்துல்ரபீக் (49). இவரும் துபை செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தபோது தனது பிறந்த தேதி, பிறந்த ஊா் ஆகியவற்றை மாற்றிப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்தவா் கைது

திருச்சியில் வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி காட்டூா் அம்மன் நகா் 11 ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் எட்வின்ராஜ், பெல் தொழிற்சாலை ஊழியா் இவரது மனை... மேலும் பார்க்க

துறையூா் பகுதிகளில் நாளை மின்தடை

துறையூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் துறையூா், முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூா், சொரத்தூ... மேலும் பார்க்க

தொட்டியம் அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி பொதுமக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், நத்தம் ஊராட்ச... மேலும் பார்க்க

கோப்பு மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் கோப்பு மகா மாரியம்மன் கோயில் தேரோாடட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், குழுமணியை அடுத்த கோப்பு கிராமத்தில் உள்ள பிரசித்த பெற்ற இக்கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் 20 ஆம்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவா் கைது

திருச்சியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட மலைக்கோட்டை ஓயாமரி சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு காா் திங்கள்கிழமை நி... மேலும் பார்க்க

திருச்சி கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும்

திருச்சி கோட்டத்தில் வரும் புதன், வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயங்கும். இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட... மேலும் பார்க்க