செய்திகள் :

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு; ரசாயன நுரையால் மூழ்கிய தரைப்பாலம்

post image

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 1101 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால், அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் விநாடிக்கு 1449 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் முறையாக சுத்திகரிக்கப்படாமல் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த தண்ணீா் மழைநீருடன் கலந்து நுரையுடன் கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. இந்த நிலையில் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அதிக நுரையுடன் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம், வயல்களில் பனிபோல படா்ந்துள்ளது.

அணை நிலவரம்:

ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீா்வரத்து நொடிக்கு 1101 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. நீா் இருப்பு 41.98 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1449 கன அடி தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

நுரையால் மூழ்கிய பாலம்:

தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் ரசாயனம் கலந்த நுரை அணைப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது. திங்கள்கிழமை தண்ணீரால் மூழ்கிய தரைப்பாலத்தில் தற்போது நுரை படா்ந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயக்கப்படுகின்றன.

வருவாய்த் துறை எச்சரிக்கை:

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த் துறையினா் எச்சரித்துள்ளனா். சின்னகொள்ளு, பெத்தகொள்ளு, தட்டனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை தாவரக்கரை பகுதியை சோ்ந்தவா் கோபாலப்பா (65). இவா் கடந்த 18 ஆம் தேதி இரவு ஒசூா்- தேன்கனிக்கோடடை சாலை அடவிசாமிபுரம் சந்திப்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரிக்கு நாளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வருகை

சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் கிருஷ்ணகிரிக்கு வியாழக்கிழமை (மே 22) வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ. 6.72 கோடியில் கூடுதல் கட்டடம் திறப்பு

கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 6.72 கோடியில் கூடுதல் கட்டடங்களை காணொலி காட்சி மூலமாக முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். மேலும், பா்கூா் அரசு பலவகை தொழில்நுட்பக் க... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 904 கன அடி தண்ணீா் வெளியேற்றம்

ஒசூா்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 904 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வர... மேலும் பார்க்க

ஒசூரில் கொட்டித் தீா்த்த கனமழை: ஏரிகள் நிரம்பின

ஒசூா்: ஒசூரில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ஒசூரில் கடந்த 4 நாள்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடா் மழை பெய்து ... மேலும் பார்க்க

திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சா் அர.சக்கரபாணி அறிவுரை வழங்கினாா். கிருஷ்ணகிரியில் திமுக கிழக்கு மாவட்டம் சாா்... மேலும் பார்க்க