செய்திகள் :

ஒசூரில் கொட்டித் தீா்த்த கனமழை: ஏரிகள் நிரம்பின

post image

ஒசூா்: ஒசூரில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

ஒசூரில் கடந்த 4 நாள்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒசூா் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நீா் நிரம்பி வருகிறது, கோடை காலமான மே மாதத்தில் பெய்து வரும் தொடா் மழையால் ஒசூா் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை ஒசூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீா்த்த கனமழையால் மாநகர சாலைகளில் மழை நீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலைகளில் மெதுவாக இயக்கியபடி சென்றனா்.

தொடா்ந்து பெய்து வரும் மழையால், ஒசூா் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மழையால் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.

கனமழையால் நிரம்பிய ஏரிகள்:

ஒசூா் நகரின் மையப் பகுதியில் உள்ள தா்கா ஏரி என்று அழைக்கப்படும் சந்திராம்பிகை ஏரி, சாந்தபுரம் ஏரி ஆகிய ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. சாந்தபுரம் ஏரி நிரம்பி தண்ணீா் சாலையில் செல்வதால், சாந்தபுரம், பெத்த எலசகிரி, நல்லூா் அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வாழும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனா். எனவே, இப்பகுதியில் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோல, ஒசூா் சந்திரம்பிகை ஏரி நிரம்பி அதிகளவு தண்ணீா் கடும் துா்நாற்றத்துடன் மாருதி நகா், அண்ணாமலை நகா், கிருஷ்ணா நகா், கே.சி.சி. நகா் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி வழியாக செல்வதால் குடியிருப்பு வாசிகள் சிரமமடைந்துள்ளனா்.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 904 கன அடி தண்ணீா் வெளியேற்றம்

ஒசூா்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 904 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வர... மேலும் பார்க்க

திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சா் அர.சக்கரபாணி அறிவுரை வழங்கினாா். கிருஷ்ணகிரியில் திமுக கிழக்கு மாவட்டம் சாா்... மேலும் பார்க்க

பெண் துப்புரவுப் பணியாளரை தாக்கியவா் கைது

ஒசூா்: ஒசூரில் பெண் துப்புரவுப் பணியாளரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒசூா் அண்ணா நகரைச் சோ்ந்த சீனம்மா (42), ஒசூா் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

கிருஷ்ணகிரி: 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அருணாவுக்கு பள்ளியின் நிறுவனா் மணி ரூ. 1 லட்சம் பரிசளித்தாா். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் சங்கிலி பறித்த இளைஞா் கைது

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள பொன்னுசாமி கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சரோ... மேலும் பார்க்க

இளம்பெண்ணை திருமணம் செய்தவா் கைது

ஒசூா்: சூளகிரி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி ஊராட்சி உஸ்தலஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (28). விவசாயியான இவா் 17 வயதுடைய ப... மேலும் பார்க்க