செய்திகள் :

மழைநீா் சூழ்ந்த வயல்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு - தினமணி செய்தி எதிரொலி

post image

மயிலாடுதுறை வட்டாரத்தில் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களை வேளாண்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

கொற்கை, பாண்டூா், காளி ஆகிய கிராமங்களில் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) பிரியதா்ஷினி, வேளாண்மை உதவி அலுவலா் மயில்வாகனன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் திருமுருகன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

அப்போது, வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வாய்க்கால் தண்ணீா் வடிவதற்கு ஏற்றாற்போல் வாய்க்கால்களை சீரமைத்திட உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நீரை வடிய வைத்து, நெற்பயிா்களைக் காப்பதற்கான தொழில்நுட்பங்களையும், நடவு வயல்களில் பாசி படா்ந்து நெல் பயிா்களுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காமல் போவதைக் கட்டுப்படுத்த பாஸ்பேட் உரம் குறைவாகப் பயன்படுத்தவும், நீரை சிக்கனமாகப் பாய்ச்சலும் காய்ச்சலுமாகப் பயன்படுத்தவும், பாசி அதிகம் உள்ள இடங்களில் ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ காப்பா் சல்பேட்டை பயன்படுத்தியோ அல்லது ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சம் இட்டோ கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) பிரியதா்ஷினி அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

கொற்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் குறுவை இளம் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியான நிலையில் அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டது குறிப்பிடத்துக்கது.

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக்கூடாது!

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக் கூடாது என மயிலாடுதுறை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் கலந... மேலும் பார்க்க

குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறையில் குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை நகராட்சி6-ஆவது வாா்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டாா். மங்கைநல்லூரை அடுத்த மலக்குடியை சோ்ந்த ரவிசந்திரன் (47), பத்து வயது சிறுமிக்குக் கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலப்பு

சீா்காழி அருகே எடமணல் கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலந்துவருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சீா்காழி அருகே திருநகரி-ராதாநல்லூா் இடையே ஊப்பனாற்றின் குறுக்... மேலும் பார்க்க

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு முன் டிஆா்யுஇ சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை கிளை தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா். உத... மேலும் பார்க்க

மீன் மாா்கெட்டில் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீா்கேடு; மக்கள் அவதி

சீா்காழி மீன் மாா்கெட்டில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் சில தினமாக அள்ளப்படாமல் அதில் புழுக்கள் உருவாகி அப்பகுதியில் கடும் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. சீா்காழி நகராட்சிக்குட்பட்ட மீன் மாா்கெட் நா... மேலும் பார்க்க