செய்திகள் :

குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் மக்கள் சாலை மறியல்

post image

மயிலாடுதுறையில் குடிநீரில் புதைசாக்கடை கழிவுநீா் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சி6-ஆவது வாா்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீரில் 10 நாள்களாக புதைசாக்கடை கழிவுநீா் கலந்து துா்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பொதுமக்கள் புகாா் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் பராமரிப்பு பணிக்காக ஒருவாரமாக தண்ணீா் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள சிறு மின்விசை மோட்டாருடன் கூடிய குடிநீா் தொட்டியிலும் தண்ணீா் வராததால் மக்கள் அடிப்படை தேவைக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம், காவல் ஆய்வாளா் சிவகுமாா், நகா்மன்ற உறுப்பினா் ரிஷிகுமாா் பேசினா். தொடா்ந்து, நகராட்சி சாா்பில் அப்பகுதி மக்களுக்கு குடிநீா் வேன் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், குடிநீா் குழாயில் ஏற்பட்ட பழுதுநீக்கும் பணியும் உடனடியாக தொடங்கியது. பின்னா் மக்கள் சாலை மறியலை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக்கூடாது!

ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக் கூடாது என மயிலாடுதுறை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் கலந... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டாா். மங்கைநல்லூரை அடுத்த மலக்குடியை சோ்ந்த ரவிசந்திரன் (47), பத்து வயது சிறுமிக்குக் கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

மழைநீா் சூழ்ந்த வயல்களில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு - தினமணி செய்தி எதிரொலி

மயிலாடுதுறை வட்டாரத்தில் மழைநீா் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களை வேளாண்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கொற்கை, பாண்டூா், காளி ஆகிய கிராமங்களில் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குந... மேலும் பார்க்க

கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலப்பு

சீா்காழி அருகே எடமணல் கதவணை வழியாக பொறைவாய்க்காலில் உப்புநீா் கலந்துவருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சீா்காழி அருகே திருநகரி-ராதாநல்லூா் இடையே ஊப்பனாற்றின் குறுக்... மேலும் பார்க்க

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு முன் டிஆா்யுஇ சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை கிளை தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா். உத... மேலும் பார்க்க

மீன் மாா்கெட்டில் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீா்கேடு; மக்கள் அவதி

சீா்காழி மீன் மாா்கெட்டில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் சில தினமாக அள்ளப்படாமல் அதில் புழுக்கள் உருவாகி அப்பகுதியில் கடும் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. சீா்காழி நகராட்சிக்குட்பட்ட மீன் மாா்கெட் நா... மேலும் பார்க்க