செய்திகள் :

எஸ்பிஐ வங்கியில் 2964 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 2,964 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் மே 29 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CRPD/ CBO/2025-26/03

பணி: Circle Based Officers(வட்டார அலுவலர்)

காலியிடங்கள்: 2,964(தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 120 காலியிடங்கள்)

சம்பளம்: மாதம் ரூ.48,480

தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டம் உள்பட மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சமமான தகுதியும் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், கணக்கியல் அல்லது பட்டயக் கணக்கியலில் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி அனுபவம்: வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில், எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வயதுவரம்பு: 30.4.2025 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

நாள்தோறும் ரூ.1000 சம்பளத்தில் உளவியல் ஆலோசகர் வேலை வேண்டுமா?

ஈரோடு மாவட்ட சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உளவியல் ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Counsellorகாலியிடம்: ... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 2025-ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கலந்தாய்விற்கு முன் மேலும் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு... மேலும் பார்க்க

ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் 11 மருத்துவப் பேராசிரியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்ச... மேலும் பார்க்க

ரூ.63 ஆயிரம் சம்பவத்தில் டெக்னீஷியன் வேலை வேண்டுமா?

தேசிய அறிவியல் அருங் காட்சியகத்தில் காலியாகவுள்ள டெக்னீஷியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.: 05/2025பணி: Technician 'A'காலியிடங்கள்: 13 (Fit... மேலும் பார்க்க

மிஸ் பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கியில் 676 இளநிலை உதவி மேலாளர் பணி!

வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) சொந்தமான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 676 இளநில... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மே 16- இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மே 16-ஆம் தேதி தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : விழுப்ப... மேலும் பார்க்க