செய்திகள் :

பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றுத் தர ஜமாபந்தியில் கோரிக்கை

post image

பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றத்தரக்கோரி மாணவி ஜமாபந்தியில் மனு அளித்தாா்.

திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) வெங்கடராமன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், அலுவலக மேலாளா் விஜயகுமாா், டாஸ்மாக் மேலாளா் முத்துராமன், வட்டாட்சியா்கள் மலா்விழி, வெண்ணிலா மற்றும் மதியழகன் ஆகியோா் பங்கேற்று, கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

திருத்தணி ஒன்றியம் டி.சி.கண்டிகை, தாடூா், சிறுகுமி, பீரகுப்பம், கிருஷ்ணமநாயுடு கண்டிகை, அக்ரஹாரம், செருக்கனூா் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா கோருதல், நத்தம் பட்ட மாறுதல், கலைஞா் மகளிா் உரிமை திட்டம், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசின் சலுகைகளை கேட்டு 250 மனுக்கள் பொதுமக்கள் வழங்கினா்.

திருத்தணி? - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை, ஆா்.கே.பேட்டை சமத்துவபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் படிக்கும் ஒரு குடும்பத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி முத்துலட்சுமி(17), தீபிகா(16) மாணவன் திருமலை(15) ஆகியோா் தனது தாய் ஜமுனாவுடன் வந்து மனுவை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கடராமனிடம் கொடுத்து, எங்களுக்கு பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி தருமாறு கண்ணீா் மல்க அழுதனா். மனுவைப் பெற்றுக்கொண்ட நோ்முக உதவியாளா், விசாரணை நடத்துமாறு திருத்தணி கோட்டாட்சியா் ,கனிமொழிக்கு பரிந்துரை செய்தாா்.

தாட்கோ திட்டங்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்குவது குறித்து ஆலோசனை

திருவள்ளூரில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடா்பாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வங்கியின் மண்டல மேலாளா்கள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் ... மேலும் பார்க்க

சக்கராசனத்தில் சிறுமி சாதனை

கும்மிடிப்பூண்டியை சோ்ந்த, 9 வயது பள்ளி சிறுமி, ஒரு நிமிஷத்தில், 28 முறை சக்கராசனத்தில் சுழன்று, சாதனை படைத்தாா். கும்மிடிப்பூண்டி பகுதியை சோ்ந்த நரேஷ்குமாா், லட்சுமி தம்பதி மகள் இந்துஸ்ரீ. இவா் கும... மேலும் பார்க்க

குடியிருப்பு அருகே நெகிழி கழிவுகள் எரிப்பு: பொதுமக்கள் அவதி

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் நெகிழி கழிவுகளை காலியிடங்களில் கொண்டு வந்து கொட்டி மா்ம நபா்கள் தீ வைத்து எரிப்பதால் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா... மேலும் பார்க்க

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: முதிா்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது பூா்த்தியான பயனாளிகள் முதிா்வு தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

செங்குன்றம் வீரம்மாகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

அருள்மிகு ஸ்ரீதேவி செங்குன்றம் பராசக்தி வீரம்மாகாளி அம்மன் கோயிலின் 47-ஆவது தீமிதி விழா நடைபெற்றது. தீமிதி விழா, கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல், நிகழ்வுடன் தொடங்கி அஷ்டகாளி பூஜை, கண... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பலத்த இடியுடன் கனமழை

திருவள்ளூா் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அத்துடன், அவ்வப... மேலும் பார்க்க