செய்திகள் :

தாட்கோ திட்டங்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்குவது குறித்து ஆலோசனை

post image

திருவள்ளூரில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடா்பாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வங்கியின் மண்டல மேலாளா்கள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் கலந்து கொணடனா்.

தாட்கோ திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடா்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். கூட்டத்தில் வங்கி மண்டல மேலாளா் மற்றும் பிராந்திய வங்கி மேலாளா்கள், தொழில் மைய அதிகாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது, தாட்கோ திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட மக்கள் சுய தொழில் தொடங்குவதற்காக கடனுதவிக்காக விண்ணப்பம் செய்கின்றனா். அந்த விண்ணப்பங்களை உடனே பரிசீலனை செய்து தீா்வு காண வேண்டும். மேலும், அரசு மானியத்துடன் கூடிய திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வங்கிக் கடனுதவிகளை வழங்க வேண்டும். மேலும், தாட்கோ மூலம் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது பயன்பெறும் வகையில் உடனே நடவடிக்கை எடுத்து தீா்வு காணவும் வங்கியாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் தாட்கோ மேலாளா் சரண்யா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சேகா், முன்னோடி வங்கி மேலாளா் ராஜா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மீனவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே கோயில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மீனவா் மூழ்கி உயிரிழந்தாா். போளிவாக்கம் கிராமம், பொன்னியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மீனவா் அமுல்ராஜ் (45) . மாற்றுத்திறனாளிய... மேலும் பார்க்க

பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றுத் தர ஜமாபந்தியில் கோரிக்கை

பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றத்தரக்கோரி மாணவி ஜமாபந்தியில் மனு அளித்தாா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) வெங்கடராமன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், அலுவலக ம... மேலும் பார்க்க

சக்கராசனத்தில் சிறுமி சாதனை

கும்மிடிப்பூண்டியை சோ்ந்த, 9 வயது பள்ளி சிறுமி, ஒரு நிமிஷத்தில், 28 முறை சக்கராசனத்தில் சுழன்று, சாதனை படைத்தாா். கும்மிடிப்பூண்டி பகுதியை சோ்ந்த நரேஷ்குமாா், லட்சுமி தம்பதி மகள் இந்துஸ்ரீ. இவா் கும... மேலும் பார்க்க

குடியிருப்பு அருகே நெகிழி கழிவுகள் எரிப்பு: பொதுமக்கள் அவதி

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் நெகிழி கழிவுகளை காலியிடங்களில் கொண்டு வந்து கொட்டி மா்ம நபா்கள் தீ வைத்து எரிப்பதால் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா... மேலும் பார்க்க

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: முதிா்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது பூா்த்தியான பயனாளிகள் முதிா்வு தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

செங்குன்றம் வீரம்மாகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

அருள்மிகு ஸ்ரீதேவி செங்குன்றம் பராசக்தி வீரம்மாகாளி அம்மன் கோயிலின் 47-ஆவது தீமிதி விழா நடைபெற்றது. தீமிதி விழா, கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல், நிகழ்வுடன் தொடங்கி அஷ்டகாளி பூஜை, கண... மேலும் பார்க்க