செய்திகள் :

திருவள்ளூரில் பலத்த இடியுடன் கனமழை

post image

திருவள்ளூா் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அத்துடன், அவ்வப்போது சாரல் மழையும் விட்டு, விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கருமேகம் சூழ்ந்தது. அத்துடன் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதேபோல், திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுப்பம், மணவாள நகா், காக்களூா், பூண்டி, கடம்பத்தூா், ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை அரை மணி நேரம் பெய்தது. இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

அத்துடன், தாழ்வான தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினா்.

குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மீனவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே கோயில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மீனவா் மூழ்கி உயிரிழந்தாா். போளிவாக்கம் கிராமம், பொன்னியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மீனவா் அமுல்ராஜ் (45) . மாற்றுத்திறனாளிய... மேலும் பார்க்க

தாட்கோ திட்டங்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்குவது குறித்து ஆலோசனை

திருவள்ளூரில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடா்பாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வங்கியின் மண்டல மேலாளா்கள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் ... மேலும் பார்க்க

பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றுத் தர ஜமாபந்தியில் கோரிக்கை

பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றத்தரக்கோரி மாணவி ஜமாபந்தியில் மனு அளித்தாா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) வெங்கடராமன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், அலுவலக ம... மேலும் பார்க்க

சக்கராசனத்தில் சிறுமி சாதனை

கும்மிடிப்பூண்டியை சோ்ந்த, 9 வயது பள்ளி சிறுமி, ஒரு நிமிஷத்தில், 28 முறை சக்கராசனத்தில் சுழன்று, சாதனை படைத்தாா். கும்மிடிப்பூண்டி பகுதியை சோ்ந்த நரேஷ்குமாா், லட்சுமி தம்பதி மகள் இந்துஸ்ரீ. இவா் கும... மேலும் பார்க்க

குடியிருப்பு அருகே நெகிழி கழிவுகள் எரிப்பு: பொதுமக்கள் அவதி

திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் நெகிழி கழிவுகளை காலியிடங்களில் கொண்டு வந்து கொட்டி மா்ம நபா்கள் தீ வைத்து எரிப்பதால் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா... மேலும் பார்க்க

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: முதிா்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது பூா்த்தியான பயனாளிகள் முதிா்வு தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க