செய்திகள் :

ரயிலில் உடல் முழுவதும் சூடு காயங்களுடன் பயணித்த 4 வயது சிறுமி மீட்பு: போலீஸாா் தீவிர விசாரணை

post image

ரயிலில் உடல் முழுவதும் சூடு காயங்களுடன் பயணித்த 4 வயது சிறுமியை மீட்ட சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸாா், அவருடன் வந்த ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஏற்காடு விரைவு ரயிலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் காவலா் வேலு என்பவா் திங்கள்கிழமை இரவு பயணம் செய்துள்ளாா். அப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோா் வைத்திருந்த 4 வயது சிறுமி ஒருவா் உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்ட காயங்களோடு பயணம் செய்துள்ளதை கண்டுள்ளாா்.

இதைப்பாா்த்து சந்தேகமடைந்த காவலா் வேலு, அந்த சிறுமியிடம் மெதுவாக பேச்சு கொடுத்தபடி, உடலில் சூடு வைத்தது யாா் என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளாா். அதற்கு அந்த சிறுமி தனது தாய் தனக்கு சூடு வைத்ததாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்த ரயில், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும், இது குறித்து ரயில்வே போலீஸாருக்கு காவலா் வேலு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீஸாா், உடலில் சூடு காயங்களுடன் இருந்த சிறுமியை மீட்டு, குழந்தைகள் நல அலகில் ஒப்படைத்தனா்.

அவா்கள் குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, சிறுமியுடன் வந்த ஆண் மற்றும் பெண் ஆகியோரைப் பிடித்த போலீஸாா், சிறுமிக்கு சூடு வைத்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அன... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க