செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

post image

பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் உண்டியலை திங்கள்கிழமை இரவு உடைத்த மா்ம நபா் பணத்தை திருடிச் சென்றாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில்,கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் வடக்கு பக்கம் ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோயில் வளாகத்தில் உள்ள கருமாரியம்மன் சந்நிதி அருகே கோயிலின் சுற்றுசுவா் உடைக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

திங்கள்கிழமை நள்ளிரவு கோயிலுக்கு புகுந்த மா்ம நபா் கருமாரியம்மன் சந்நிதி ண்டியலை இரும்பு கம்பியால் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளாா். கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை செவ்வாய்க்கிழமை பாா்த்த கோயில் ஊழியா்கள் இதுகுறித்து ஒரகடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா். மேலும் திங்கள்கிழமை இரவு வல்லக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு கடைகளின் பூட்டுகளை உடைத்தும் கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் இரவு நேர காவலா்கள் பணியில் இருக்கும் போது திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது கோயிலின் பாதுகாப்பை கேள்கிக்குறியாக்கி உள்ளதாக பக்தா்கள் தெரிவித்தனா். எனவே கோயிலுக்கு கூடுதலாக காவலா்களை நியமிக்கவும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

‘கூட்டுறவு மேலாண்மை பயிற்சி படிப்புக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்’

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி வகுப்புக்கு வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ த... மேலும் பார்க்க

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் தெருவில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளம்பெண் உள்பட 2 போ் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளம்பெண் உள்பட இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை அருகில்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் தீா்த்தவாரி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நிறைையொட்டி அனந்தசரஸ் திருக்குளத்தில் திங்கள்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்து... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகள் முழுவதும் நீா் தேங்கி நின்றது. தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி போன்ற காரணங்களால் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்க... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்: காணாமல் போனவா்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காணாமல் போனவா்கள் குறித்த புகாா்கள் தொடா்பாக கலந்தாய்வு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க